வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா

சிரம்பான், ஜூன்.19-

சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜாஃபாரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர உற்சவப் பெருவிழா வரும் ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

இதனையொட்டி வரும் ஜுன் 27ஆம் தேதி தொடங்கி ஜுலை 9 ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகளுடன் வருடாந்திர உற்சவப் பெருவிழா களைகட்டவிருக்கிறது.

திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோவில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகளின் தலைமையில் உற்சவ பூஜைகள், அவரின் ஆலோசனையின்படி நடைபெறவுள்ளது.

வரும் ஜுன் 26 ஆம் தேதி வியாழக்கிழமை முகூர்த்தக் கால், கணபதி ஹோமம், ஜுன் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றம், ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரத ஊர்வலம் மற்றும் ஜுலை 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியிறக்கம் என வருடாந்திர உற்சவம், நான்கு சிறப்பு அம்சங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

13 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் உற்சவப் பெருவிழாவிலும் பக்தப் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு, ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரரின் அருளாசி பெறுமாறு தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.

WATCH OUR LATEST NEWS