போலீஸ் படையின் அடுத்தத் தலைவர் யார்

இஸ்கண்டார் புத்ரி, ஜூன்.19-

நாட்டின் புதிய போலீஸ் படைத் தலைவரின் பெயரை அறிவிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்து விட்டார்.

போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் வரும் ஜுன் 22 ஆம் தேதி பணி ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அவரின் இடத்தை நிரப்புவதற்கு புதிய போலீஸ் படைத் தலைவரின் பெயர் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

ஐஜிபி பதவிக்கு சில வேட்பாளர்களின் பெயர்கள் அனுப்பப்பட்டு விட்டது. யார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறித்து மாமன்னரைத்தான் தாம் கேட்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS