பெட்ராஜெயா, ஜூன்.20-
இன்று சரவாக், பெட்ராஜெயாவில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025 போட்டியின் அரையிறுதிச் சுற்றில் தனது சக விளையாட்டரான அய்ஃபா அஸ்மானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் மலேசிய வீராங்கனை ரேச்சல் அர்னால்ட்.
ரேச்சல் முதல் இரண்டு சுற்றுகளை 11க்கு 9, 11க்கு 2 என்ற புள்ளிகளில் வென்றார். இருப்பினும், அய்ஃபா அடுத்த இரண்டு சுற்றுகளை 11க்கு 8, 11க்கு 9 என்ற புள்ளிகளில் வென்று போட்டியைச் சமன் செய்தார். இறுதியாக, பரபரப்பான ஐந்தாவது சுற்றில் ரேச்சல் 12க்கு 10 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் ஹாங் காங்கைச் சேர்ந்த ஹோ ஸே லோக்கை எதிர்கொள்ளவுள்ளார்.