கோலாலம்பூர், ஜூன்.20-
தாங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகப் பொய்யானத் தகவல் அளித்த ஆறு பேருக்கு தலா 400 ரிங்கிட் அபராதம் விதித்து இன்று உத்தரவிட்டது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம். 20 முதல் 40 வயதுடைய இந்த ஆறு பேரும் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
ஜூன் 2025-இல், பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையம், செந்துல் காவல்துறை தலைமையகம், வங்சா மாஜு காவல்துறை தலைமையகம், செராஸ் காவல்துறை தலைமையகம் போன்ற பல்வேறு காவல் நிலையங்களில் இவர்கள் பொய்யானத் தகவலைக் காவல் துறைப் புகாரில் கூறி இருந்தனர். குற்றவியல் சட்டம் பிரிவு 182-இன் கீழ் இவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.