புத்ராஜெயா, ஜூன்.20-
பாடகர் ரேஷ்மோனுவும் அவரது மனைவியும், 45 கிலோ தங்கக் கட்டிகளை மோசடி செய்ததற்காக, ஒரு செயலாளருக்கு 6 மில்லியன் ரிங்கிட் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தங்கக் கட்டிகள் முதலீட்டு நோக்கங்களுக்காக ஒப்படைக்கப்பட்டதாக உயர் நீதிமன்றம் முடிவு செய்ததில் எந்தத் தவறும் இல்லை என நீதிபதி பி. ரவிந்திரன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு தீர்ப்பளித்தது. ரேஷ்மோனுவும் அவரது மனைவியும், தங்கக் கட்டிகள் விற்பனைப் பரிவர்த்தனையின் ஒரு பகுதி என்று வாதிட்டனர். ஆனால் நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை.