காவல் துறையின் திறனை மேம்படுத்த காலிட் இஸ்மாயில் உறுதி!

கோலாலம்பூர், ஜூன்.20-

அரச மலேசியக் காவல்துறையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில், தனது நியமனமானது எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பது உட்பட, காவல்துறையின் திறனையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு என்று கூறினார்.

எதிர்கால காவல் பணிகளுக்காக, செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் படையை நவீனமயமாக்க அவர் திட்டமிட்டுள்ளார். பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு தனது நன்றியைத் தெரிவித்த காலிட் இஸ்மாயில், மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

WATCH OUR LATEST NEWS