தடுப்பூசி செலுத்தாத ஆசிரியரின் பணி நீக்கம் நியாயமானது – தொழில்துறை நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், ஜூன்.21-

கோவிட்-19 தடுப்பூசி செலுத்த மறுத்த ஓர் ஆசிரியரைப் பணிநீக்கம் செய்ய ஷா ஆலாம் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு உரிமை உண்டு என தொழிற்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியரின் பணியானது பெற்றோர்கள், பள்ளி ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் தொடர்பு கொள்வதை உள்ளடக்கியதால், தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கப் பள்ளிக்கு உரிமை உண்டு என நீதிபதி எஸ். வனிதா மணி கூறினார். தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்த ஆசிரியரின் கவலைகள் மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்படவில்லை என்றும், அவரது மறுப்பு ஆதாரமற்றது என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது.

WATCH OUR LATEST NEWS