மின்சார வாகனம் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலி

சித்வான், ஜூன்.21-

நேபாளத்தின் பாக்மதி மாகாணத்தில் பேருந்து ஒன்று மின்சார வாகனத்துடன் மோதியதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

அந்த பேருந்து சித்வான் மாவட்டத்தில் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் தங்காதியில் இருந்து காகர்பிட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த போது அவ்விபத்து ஏற்பட்டது.

இதில் 7 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.

WATCH OUR LATEST NEWS