தங்கும் விடுதியில் கலவரம் – 46 வெளிநாட்டினர் கைது!

புக்கிட் மெர்தாஜாம், ஜூன்.21-

நேற்று இரவு பினாங்கில் உள்ள ஒரு தங்கும் விடுதி வளாகத்தில் ஏற்பட்டக் கலவரத்தைத் தொடர்ந்து, 46 வெளிநாட்டு ஆடவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். புக்கிட் மீன்யாக் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கான தங்குமிடமாக இந்த விடுதியைப் பயன்படுத்தியுள்ளது. அங்கு புகைப் பிடிக்கவோ அல்லது மது அருந்தவோ ஊழியர்களுக்கு அனுமதி இல்லை.

விதிகளை மீறிய ஊழியர்களிடமிருந்து அபராதம் வசூலித்த விடுதி வார்டன் மீது சில ஊழியர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியால் இந்தக் கலவரம் ஏற்பட்டது என செபராங் பிறை தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS