மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் கலந்துரையாடினார். புக்கிட் துங்கு அரண்மனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் நாட்டின் தற்போதைய நிலவரங்களையும் பல்வேறு நடப்புப் பிரச்சினைகள் குறித்தும் மாமன்னரிடம் எடுத்துரைத்தார். இந்தச் சந்திப்பு குறித்த தகவல் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.