பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது

புதுடெல்லி, ஜூன்.22-

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை என்.ஐ. ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் அம்பலமானது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பஹல்காமில் கொடூரமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இருவரும் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

இவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் ஆவர். பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு முன் அவர்கள் தெரிந்தே மூன்று பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளனர். பஹல்காமில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

WATCH OUR LATEST NEWS