மலாக்கா, ஜூன்,23-
தனித்து வாழும் தந்தையான ஆடவர் ஒருவர், செயற்கைத் துப்பாக்கி மற்றும் தோட்டாங்களை வைத்திருந்ததாக இன்று மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
43 வயது தான் சூ கியான் என்ற அந்த நபர், 1960 ஆம் ஆண்டு அபாயகர ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த ஜுன் 8 ஆம் தேதி நள்ளிரவு 12.24 மணியளவில் மலாக்கா, செமாபோக், தாமான் செமாபோக் என்ற இடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.