ஈப்போ, ஜூன்.23-
ஈப்போ, சிம்பாங் பூலாய், தாமான் சொங் சோனில் நிகழ்ந்த தீ விபத்தில் ஐந்து தொழிற்சாலைகள் அழிந்தன. இச்சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நிகழ்ந்தது,
அந்த ஐந்து தொழிற்சாலைகளும் கிட்டத்தட்ட 70 விழுக்காடு வரை தீயில் அழிந்ததாக தீயணைப்பு, மீட்புப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
தீயைக் கட்டுப்படுத்துவதில் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் கடுமையாகப் போராடியதாக அவர் குறிப்பிட்டார்.