டோஹா, ஜூன்.24-
கட்டார் வான் போக்குவரத்துப் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக டோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம் அறிவித்துள்ளது.
டோஹாவிலிருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மலேசியர்கள், தங்கள் விமானப் பயணங்களை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதே வேளையில் கட்டாரில் உள்ள மலேசியர்கள், எப்போதுமே நம்பத்தகுந்த தகவல்களின் ஆலோசனைப்படி நடக்குமாறு மலேசியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.