கோலாலம்பூர், ஜூன்.25-
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியைப் போல், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிரான போலீஸ் புகார் விசாரிக்கப்படும் வரை, அவர் எந்தவொரு மேல்முறையீடு தொடர்புடைய விண்ணப்பங்களையும் விசாரிக்கக்கூடாது. மாறாக, விசாரணை முடியும் வரை அவர் விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த நீதிபதியின் நன்னடத்தை தொடர்பில் அளிக்கப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து செக்ரதரியட் எனப்படும் நீதி பரிபாலன அரண் காப்பு அமைப்பு, இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
நீதி பரிபாலனத் துறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை அந்த நீதிபதி மதிக்கத் தவறிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.