கார் கவிழ்ந்ததில் ஆடவர் மரணமுற்றார்

கிள்ளான், ஜூன்.25-

கார் ஒன்று வேகக் கட்டுல்லாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி கவிழ்ந்ததில் ஆடவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் கிள்ளான், தாமான் சீ லியோங்கில் நிகழ்ந்தது.

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட 20 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடலை மீட்பதற்குப் பிரத்தியேகச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

கோலக் கிள்ளானைச் சேர்ந்த தீயணைப்பு, மீட்புப் படையினர், இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS