வாஷிங்டன், ஜூன்.25-
ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் போர் நிறுத்த்கம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மறுத்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான், தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.