நிம்மதி பெருமூச்சு விடுவதாக சையிட் சாடிக் தெரிவித்தார்

புத்ராஜெயா, ஜூன்.25-

தனக்கு எதிரான நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டில் 7 ஆண்டு சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள மூடா கட்சியின் முன்னாள் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான், தம்மால் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விட முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட களங்கத்தைப் போக்குவதற்கு கடந்த 5 ஆண்டு காலமாக கடுமையாகப் போராடியாக மூவார் எம்.பி.யான சையிட் சாடிக் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தம்மை விடுதலை செய்தது மூலம் நீதி வென்றுள்ளதாக சையிட் சாடிக் குறிப்பிட்டார்.

தனது குடும்ப உறுப்பினர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த சையிட் சாடிக், இறைவனுக்கும், நீதிமன்றத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபட முடியும் என்று தாம் திடமாக நம்பியிருந்ததாக முன்னாள் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரான சையிட் சாடிக் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS