சோவ் கோன் யோவ் – ராமசாமி இடையே அவதூறு வழக்கு: மத்தியஸ்தம் ஜூலை 2 ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது

ஜார்ஜ்டவுன், ஜூன்.25-

சர்ச்சைக்குரிய பத்து காவன் நில ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அவதூறு வழக்கு, வரும் ஜூலை 2 ஆம் தேதி மீண்டும் தொடரவிருக்கிறது. இதற்கான தேதியைப் பினாங்கு நீதிமன்ற மத்தியஸ்த மையம் நிர்ணயித்துள்ளது.

பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவிற்கும் முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. ராமசாமிக்கும் இடையிலான இந்த வழக்கின் மத்தியஸ்த அமர்வு, அடுத்த மாதம் தொடரவிருக்கிறது என்று டாக்டர் இராமசாமியின் வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் தின் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS