புத்ராஜெயா, ஜூன்.25-
பொருட்களை ஏற்றிச் செல்லும் லோரிகள் மற்றும் விரைவு பேருந்துகள் சம்பந்தப்பட்ட 28 நிறுவனங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்மன்களைப் பெற்று அவற்றுக்கு இன்னும் தீர்வு காணாாமல் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அம்பலப்படுத்தினார்.
சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜேவினால் வெளியிட்டப்பட்ட சம்மன்களுக்கு அவை தீர்வு காணாமல் இருந்து வருகின்றன.
கனரக வாகனங்கள் மற்றும் விரைவு பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துகள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியத்தில் போக்குவரத்து அமைச்சு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.