சிப்பாங், ஜூன்.27-
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் பசுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகப் பேர்வழிகளை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்கள் தடுத்து வைப்பதற்கு சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு பெண்களும், ஒரு ஆணும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணியளவில் சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அஸாராவுர்னி அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.
அந்த மூவரையும், இன்று ஜுன் 27 ஆம் தேதி தொடங்கி வரும் ஜுலை 3 ஆம் தேதி வரை 7 நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு நீதிபதி அஸாராவுர்னி போலீசாருக்கு அனுமதி அளித்தார்.
தடுப்புக் காவல் அனுமதி வழங்கப்பட்டவுடன் மூவரும் காலை 9.40 மணிக்கு நீதிமன்றத்திலிருந்து சிப்பாங் மாவட்ட போலீஸ் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.