புத்ராஜெயா, ஜூன்.27-
வரும் ஜுலை மாதம் 1 ஆம் தேதி முதல் எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை, சேவை வரி அமலுக்கு வருகிறது. மண்டரின் ஆரஞ்சு பழங்கள் மற்றும் பேரிச்சம் பழங்கள் ஆகியவற்றுக்கு எஸ்எஸ்டி வரி விலக்களிப்பு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களுக்கு எஸ்எஸ்டி வரி விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த புதன்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து மண்டரின் ஆரஞ்சு மற்றும் பேரிச்சம் பழங்களுக்கு விலக்களிப்பு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.