ஆக்செம் தலைமை இயக்குநராக முகமட் ஷுஹைலி நியமனம்

கோலாலம்பூர், ஜூன்.28-

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஸையின், மலேசிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஏஜென்சியான AKSEM ( ஆக்செம் ) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் இண்டு ஆண்டு கால பதவிக்காலம், வரும் திங்கட்கிழமை முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திறமையிலும், ஆற்றலிலும், நம்பகத்தன்மையிலும் ஓர் உயர்வுமிக்க போலீஸ் அதிகாரியாக போற்றப்படும் 52 வயது டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் புக்கிட் அமான் சிஐடி இயக்குநராக பதவி வகித்து வருகிறார்.

FBI- யில் பயிற்சிப் பெற்றவரான முகமட் ஷுஹைலி, இதற்கு முன்பு, பினாங்கு மாற்றும் கோலாலம்பூர் போலீஸ் தலைவராக பொறுப்பு வகித்தார். சிலாங்கூர் மாநில முன்னாள் ஹோக்கி ஆட்டக்காரரான இவர், பரமலிங்கத்திடம் பயிற்சிப் பெற்றவர் ஆவார்.

WATCH OUR LATEST NEWS