வட கரோலினா, ஜூன்.29-
செல்சி அணி கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்குள் நுழைந்துள்ளது. முன்னதாக பென்ஃபிகாவுக்கு எதிரான ஆட்டத்தில் செல்சி 4க்கு 1 என்ற கோல்களில் வெற்றி பெற்றது. முற்பாதி ஆட்டம் கோலேதும் இல்லாமல் முடிவுற்றது.
பிற்பாதியில் இரு அணிகளும் ஒன்று மற்றொன்றுக்கு ஈடு கொடுத்து விளையாடியது. ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் செல்சி ஒரு கோலை அடித்து கோல் வேட்டையைத் தொடக்கி வைத்தது. அதன் பிறகு பென்ஃபிகாவுக்கு பெனல்டி வாய்ப்பு கிடைத்தது. அவ்வணி அதனைக் கோலாக்கியது.
ஆட்டம் 1க்கு 1 என சமநிலையில் இருந்த சமயம், செல்சி எழுச்சி பெற்று மேலும் மூன்று கோல்களைப் புகுத்தி வெற்றியைத் தன்வசம் ஆக்கியது. அதன் வழி செல்சி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.