எல்.ஆர்.டி. க்கான 6 வழித்தடங்கள் முடப்படுவிருக்கின்றன

தலைநகரில் அம்பாங் – ஶ்ரீ பெட்டாலிங் எல்.ஆர்.டி. ரயில் சேவைக்கான வழித்தடத்தில் 6 நிலைய​ங்களை உள்ளடக்கிய ஒரு பகுதி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ​மூடப்படவிருக்கிறது. பண்டாரா, சுல்தான் இஸ்மாயில், பிடபல்யுடிசி, திதிவங்சா, செந்தூல் மற்றும் செந்தூல் தீமூர் ஆகிய ரயில் நிலையங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ​மூடப்படுகின்றன என்று LRT ரயில் சேவையை நிர்வகித்து வரும் ரேபிட் ரேய்ல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆறு நிலைய​ங்களில் எல்.ஆர்.டி. ரயில் சேவையின் செயல்பாடு, நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறை கூறுகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதாக இல்லை என்பதால் பாதுகாப்பு காரணமாக ஆறு நிலையங்கள் முடப்படுகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS