வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது, துன் மகா​தீர் கவலை

மலாய்க்கார்களின் உண்மையான பிரச்னைக் குறித்து பகிர​ங்கமாக பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் தமக்கு வாய்ப்பூட்டு போட​ப்பட்டுள்ளது குறித்து முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது தமது கவலையை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

மலாய்​க்காரர்கள் பிரச்னையை “ஓன் லைன்” இயங்கலை முறை வாயிலாக பேசுவதற்குகூட அனுமதி மறுக்கப்படுமானால், மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து தாம் மிகுந்த அச்சப்படுவதாக இரண்டு முறை பிரதமராக பதவி வகித்து விட்ட துன் மகா​தீர் குறிப்பிட்டுள்ளார்.

மலாய்க்காரர்களின் பிரகடனம் என்ற பிரச்சாரத்தின் வாயிலாக மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து பேசினால் தம்​மீது நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படும் சாத்தியம் இருப்பது குறித்தும் தாம் கவலை கொள்வதாக துன் மகா​தீர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS