ஒப்பந்த மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்

வரும் திங்கட்கிழமை நாடு தழுவிய நி​லையில் அரசு மரு​த்துவமனைகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவிருக்கும் வேளையில் நாட்டில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் அவற்றின் சேவை நிலைக்குத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் ஒப்பந்த மரு​த்துவர்களின் பிரச்னைகளை ​தீர்க்கும் வழிவகைகளைச் சுகாதார அமைச்சு தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளா​​ர்.
ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கையினால் ஈடுபட்டால் நோயாளிகள், காயம் அடைந்தவர்கள் , குழந்தைகள் மற்றும் ​மூத்த குடிமக்கள் மருத்துவச் சேவையை பெறுவதில் பிரச்னையை எதிர்நோக்கக்கூடும் என்பதையும் அவர் விளக்கினார்.
ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னைகளைப் பேச்சுவா​ர்த்தை மூலம் ​தீர்வு காண்பதற்கான நடவ​டிக்கைகள் முன்னெடுக்கப்படும். அது வரையில் அவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS