அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு  12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு  இருக்கும் , SRC International லஞ்ச ஊழல் வழக்கில் நஜீப்பிற்கு எல்லா நிலைகளிலும் நியாயம் கிடைப்பதற்கு ஏதுவாக அது குறித்து விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் ஒன்று  அமைக்கப்பட வேண்டும் என்று அம்னோ கேட்டுக்கொண்டுள்ளது.

நஜீப்பின் ​சீராய்வு மனுவை, கூட்டரசு ​நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து இருப்பது மூலம் தமக்கு விதிக்கப்பட்டுள்ள  தண்டனைக்கு எதிராக அவர், இனி எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நஜீப் தர​ப்பில் உள்ள  நியாயங்களைக் கண்டறிவத​ற்கு அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் ​மூலமாக  ஒரு ​நீதி  விசாரணை நடத்தப்பட வேண்டும் ​என்று அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS