முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கும் , SRC International லஞ்ச ஊழல் வழக்கில் நஜீப்பிற்கு எல்லா நிலைகளிலும் நியாயம் கிடைப்பதற்கு ஏதுவாக அது குறித்து விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அம்னோ கேட்டுக்கொண்டுள்ளது.
நஜீப்பின் சீராய்வு மனுவை, கூட்டரசு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து இருப்பது மூலம் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக அவர், இனி எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நஜீப் தரப்பில் உள்ள நியாயங்களைக் கண்டறிவதற்கு அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலமாக ஒரு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே கேட்டுக்கொண்டார்.