பினாங்கு தீவின், மாநகர் மன்ற செயலாளர் டத்தோ எ.ராஜேந்திரன், அத்தீவின் புதிய மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு மேயர் டத்தோ இயூ துங் சியாங் கிடமிருந்து வரும் மே 5 ஆம் தேதி, 60 வயதான ராஜேந்திரன் அப்பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.
ராஜேந்திரன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பினாங்கு மாநகர் மன்றத்தின் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
பினாங்கு தீவு, நகராண்மைக் கழக அந்தஸ்தில் இருந்த போது 1985 ஆம் ஆண்டு அம்மன்றத்தில் இணைந்த ராஜேந்திரன், 35 ஆண்டுக் காலச் சேவைக்குப் பிறகு பணி ஓய்வு பெறும் இக்காலக்கட்டத்தில், அவரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டு மேயர் அந்தஸ்து வழங்கப்படுள்ளது.
மலேசிய வரலாற்றில், மேயர் பதவிக்கு அமரும் முதலாவது இந்தியர், ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.