Autism சிறுவன் மூழ்கி உயிரிழந்தான்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 28 –

பெட்டாலிங் ஜெயா,தாமான் அமான் அருகிலுள்ள ஏரியில் autism ஆன ஆண் சிறுவன் ஒருவன் மூழ்கி உயிரிழந்தான்.

நேற்று இரவு 7 மணியளவில் 4 வயதுடைய சிறுவனின் உடல் அவ்வழியாக வந்த மீனவரின் மூலம் கண்டறியப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஷாஹுல்னிசாம் ஜாபார் இஸ்மாயில் தெரிவித்தார்.

முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை மாலை 4 மணியளவில் சம்பந்தப்பட்ட குழந்தை காணவில்லை என்று சி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக ஷாஹுல்னிசாம் ஜாபார் கூறினார்.

சவப் பரிசோதனைக்காக அந்த சிறுவனின் உடல் யூனிவெர்சித்தி மலாயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் நேற்று விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்