Porsche வாகனம் தீப்பிடித்து எரிந்தது

கோம்பாக், பிப்ரவரி 29 –

கோம்பாக், ஜாலான் லிங்காரான் தெங்கா 2 ம்.ர்.ர்2 வில் மோட்டார் சைக்கிளை தவிர்க்க முற்பட்ட Porsche Panamera 4ஸ் ரக வாகனம் நேற்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 42 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற அந்த கார் கிரின்வூட் வழியாக பயணம் செய்யும் பொழுது அருகில் கவனக்குறைவாக வந்த மோட்டார் சைக்கிளை தவிர்க்க முயற்சித்து விபத்துக்குள்ளாகியதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியனர் னோர் அரிபின் மொகாமாட் னாசிர் கூறினார்.

புக்கிட் இடாமான் னிலிருந்து வாங்சா மாஜு விற்கு பயணித்து வந்த அக்காரின் ஓட்டுநர் லெபு உத்தாமா ஶ்ரீ கோம்பாக் விலிருந்து திடீரென வெளியே வந்த மோட்டார் சைக்கிளை தவிர்க்க முயன்றபோது இக்கோர விபத்து நிகழ்ந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதன் விளைவாக பாதிக்கப்பட்ட கார் ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதியதாக னோர் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்