WCE நெடுஞ்சாலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை

பேராக், மார்ச் 21

பேராக், தைப்பிங்-கிற்கு அருகாமையிலுள்ள மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை, WCE-யின் 253.3ஆவது கிலோமீட்டரில் இரும்பிலான சாலை தடுப்புக்குள் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் உடலை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை நேற்று மீட்டனர்.

20 கிலோகிராம் எடை கொண்ட Neofelis nebulosa வகையைச் சேர்ந்த அந்த ஆண் சிறுத்தை, வாகனத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என அத்துறையின் தலைவர் யுசோப் ஷாரிப் கூறினார்

5 வயதுடையதாக சந்தேகிக்கப்படும் அச்சிறுத்தையின் உடல் வீங்கியிருந்ததோடு தூர்நாற்றம் வீசுவதை பார்க்கையில், அது இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றாரவர்.

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தையின் 22 வினாடிகள் கொண்ட காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகியிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்