டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் வெகு விரைவில் கவிழப் போவதாக ஆருடம் கூறியுள்ள பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அரசாங்கத்தை மாற்ற விரும்பினால் வரும் 16 ஆவது பொதுத் தேர்தல் வரை காத்திருக்குமாறு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடப்பு அரசாங்கம் கவிழு வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக ஹாடி அவாங் கூறியுள்ளார். இது ஓர் உலாமாவின் மிக மோசமான பிரார்த்தனையாகும் என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் மக்களின் கருத்திணக்க ஆதவுடன் ஓர் அரசாங்கத்தை நிறுவ வேண்டிய ஒரு கட்சியின் தலைவர், நடப்பு அரசாங்கம் கவிழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார் என்றால் அவர் எத்தகையை மனப்போக்கு கொண்டவர், சிந்தனையுடையவர் என்பதை மக்கள்தான் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.