கோலாலம்பூர், ஏப்ரல் 19-
தீபகற்ப மலேசியாவிலும், சபா சரவாவிலும் இன்று தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக வானிலை மிக மோசமாக இருக்கும் என்று மலேசிய வானிலை இலாகாவான MetMalaysia அறிவித்துள்ளது.
கனத்த மழை, பலத்த காற்று, இடியுடன் கூடிய கடும் மழை போன்று ஒவ்வொரு நாளும் மாலை முதல் இரவு நேரம் வரை நீடிக்கும் என்று அது எச்சரித்துள்ளது.
இந்த மூன்று நாட்களிலும் சிலாங்கூர், கோலாலம்பூர், பேரா, ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் முதலிய மாநிலங்களில் காலையிலும், மாலையிலும் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக MetMalaysia தெரிவித்துள்ளது.