பேருந்து ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக்காவல்

ஜொகூர் பாரு, ஏப்ரல் 19-

ஜோகூர், குளுவாங் , ஜாலான் டான் ஸ்வீ ஹோ, சமிக்ஞை விளக்குப்பகுதி சாலை சந்திப்பில் நேற்று காலை 10.30 ணியளவில் 11 வாகனங்களை மோதித் தள்ளிய பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நான்கு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாஜிஸ்திரேட் சுஹைலா ஷாபி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 51 வயதுடைய அந்த பேருந்து ஓட்டுநரை விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியை பெற்றனர்.

தொழில் பயிற்சி கல்லூரிக்கு சொந்தமான அந்த பேருந்தில் பிரேக் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. வேக கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, இரண்டு லாரிகள் மற்றும் ஒன்பது கார்களை மோதி தள்ளியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயம் அடையவில்லை.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்