அடைமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு

அடைமழையைத் தொடர்ந்து ஜோகூர், ஜாலான் கோத்தா திங்கி – குளுவாங் சாலையில் செக்‌ஷன் 70 ஆவது பகுதியில் நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொதுப் பணி இலாாகா அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சாலையில் அனைத்து வாகனங்களும் பயன்படுத்துதற்கு ஒரு தடம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. வாகனமோட்டிகள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு சம்பந்தப்பட்ட சாலை பகுதியில் மிக கவனத்துடன் பயணிக்குமாறு பொதுப் பணி இலாகா அறிவுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்