அதிகாரத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை

சராவாக், மார்ச் 8 –

சரவாக்கில் இராணுவத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரியான ஒருவர் தமது அதிகாரத்தையும் ஆள்பலத்தையும் பயன்படுத்தி தனக்கு கீழே பணிபுரியும் அதிகாரியை துன்புறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து மலேசிய இராணுவம் தி.டி.ம் உள்நிலை விசாரணை வாரியத்தை நிறுவியுள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண்பதற்கும் இக்குற்றச்சாட்டை குறித்து விரிவான முறையில் ஒரு மதீப்பீடு செய்வதற்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள குழு நிறுவப்பட்டதாக தி.டி.ம் ஓர் அறிக்கையில் நேற்று தெரிவித்திருந்தது.

இவ்விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தற்போதைய சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கேற்ப அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று தி.டி.ம் கூறியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில் குற்றச்சாட்டப்பட்ட அந்த அதிகாரி அரசு பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தி.டி.ம் அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்