கோலாலம்பூர், ஏப்ரல் 4 –
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை சிறையில் வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் தாம் எந்த தகவலையும் கொண்டிருக்கவில்லை என்று டத்துக் ஶ்ரீ சைபுடின் நசுதியன் இஸ்மாயில் தெரிவித்தார்.
தனது சிறைத் தண்டனையை 12 ஆண்டு காலத்திலிருந்து 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கும் அரச மன்னிப்பு வாரியம், தம்மை வீட்டுக்காலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக நஜீப் கூறி வருகிறார்.
எனினும் அது குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று சைபுடின் விளக்கினார்.