புத்ராஜெயா, ஏப்ரல் 4 –
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றவரும் அந்நாட்டின் தற்காப்பு அமைச்சருமான பரபோவா சுபியந்தோ, மரியாதை நிமித்தமாக இன்று வியாழக்கிமை புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிமை சந்தித்தார்.
மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள ஒரு நாள் சிறப்பு வருகையின் ஒரு பகுதியாக பரபோவா சுபியந்தோ காலை 9.00 மணியளவில் பெர்டானா புத்ராவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
2024/2029 தவணைக்காலத்திற்கான இந்தோனேசிய அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வு பெற்று இருக்கும் பரபோவா சுபியந்தோ, மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது அதிகாரத்துவ வருகை இதுவாகும்.