பினாங்கு , மே 21-
பினாங்கு மாநில அரசின் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரின் மகன் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் கைகலப்பு குறித்து போலீசார் தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் சுல்தான் அகமது ஷா- சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் சில நபர்கள் சம்பந்தப்பட்ட இந்த சண்டையில் பினாங்கு முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரின் மகனும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது என்று வட கிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரஸாலான் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.