நிபோங் தெபால், மார்ச் 30-
இடைநிலைப்பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவனுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியைக்கு எதிரான விசாரணை முடியும் வரையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிப்பாங் வட்டாரத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றிய அந்த ஆசிரியை பள்ளி மாணவர்களுடன் பேசுவதற்கோ, தொடர்பு கொள்ளவோ தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவனின் காதல் வலையில் விழுந்து, பாலியல் உறவுக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாணவனின் தாயார், சிப்பாங் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இவ்விவகாரம் தற்போது போலீஸ் விசாரணையில் இருந்த போதிலும், அந்த இடைநிலைப்பள்ளி ஆசிரியைக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னதாக கல்வி அமைச்சு அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று பட்லினா சிடேக் தெரிவித்தார்.