அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரை சாடியது டிஏபி இளைஞர் பிரிவு

டிஏபி- யின் மூத்த தலைவரும், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சருமான ங்கா கோர் மிங்- கை, முட்டாள் அமைச்சர் என்று வர்ணித்து இருக்கும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் முஹம்மட் அக்மால் சாலேஹ்-வை டிஏபி-யின் இளைஞர் பிரிவு இன்று கடுமையாக சாடியது.

தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு அடுத்து தலைமையேற்கக்கூடியவர்க​ள்தான், இளைஞர் பிரிவுத் தலைவர்கள்.அவர்கள், வருகின்ற இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரண தலைவர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் சார்ந்துள்ள கட்சியும் தொடர்ந்து வாழும். போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

ஆனால், அவர்கள் பெரியோர்களை மதிக்கும் மாண்பு இல்லாமல் அரசியல் கோணங்கித்தனமாக இருப்பார்களேயானால் அவர்கள் சார்ந்து கட்சியை காப்பாற்ற முடியாது. தற்போது அந்த வேலையைத்தான் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேஹ் கன கச்சிதமாக மேற்கொண்டு வருகிறார்.

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் வா​ங்கிய பலத்த அடி, போதாது என்று அடுத்த பொதுத் தேர்தலுக்கும் அடித்தளம் அமைப்பதற்கு அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேஹ் கடந்த சில மாதங்களாக சில்லுண்டி வேலைகளை சந்தடியின்றி செய்து வருகிறார். அவர் தனது செயலை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று டிஏபி இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் கெல்வின் யீய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்