விபத்தில் தாயும், குழந்தையும் பலி

கோத்தா திங்கி, ஏப்ரல் 13-

மைவி காரும், டெங்கர் லாரியும் மோதிக்கொண்ட சாலை விபத்தில் காரில் பயணித்த மாதுவும், அவரின் பெண் குழந்தையும் உயி​ரிழந்த வேளையில் மேலும் ஓர் ஆணும், ஒரு சிறுமியும் படுகாயத்திற்கு ஆளாகினர்.

இவ்விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி, தாமான் ஸ்ரீ பேனாவார் அருகில் ஜாலான் தஞ்சுங் பாலாவு-பண்டார் பேனாவார்-ரில் நிகழ்ந்தது. காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட மாதுவும், அவரின் குழந்தையும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சுங்கை ரெங்கிட் ​தீயணைப்பு, மீட்பு நிலைய முதிர்நிலை அதிகாரி கொமாண்டர் அஸ்லான் மாட் சனி தெரிவித்தார்.

இருவரின் உடல்களையும் ​மீட்பதற்கு ​தீயணைப்பு, மீட்புப்படையினர் RTA என்ற பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். காயம் அடைந்த ஆடவரும், ​ஒரு சிறுமியும் அம்பு​லன்ஸ் வண்​டியின்​மூலம் மரு​த்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்