அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரை ரபிடா சாடினார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22.

காலுறையில் ‘அல்லா’ என்ற வார்த்தை அச்சிடப்பட்டு இருந்து விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியதில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ்- வை அக்கட்சியின் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவி டான் ஸ்ரீ ரபிடாஹ் அஜீஸ் இன்று கடுமையாக சாடினார.

ஓர் அரசியல் கட்சியின் இளைஞர் பிரிவுக்கு தலைமையேற்றுள்ள தலைவர் என்ற முறையில் பிறர் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை எதிர்கொள்ளும் போது , எவ்வாறு முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நடத்தையை அவரிடம் காண முடியவில்லை என்று முன்னாள் அனைத்துலக வாணிப, தொழில் துறை அ மைச்சராக ரபிடா தெரிவித்தார்.

நபிகள் நாயகம் காட்டியை முன்னனதாரணத்தை ஓர் அரசியல் கட்சிக்கு தமையேற்றுள்ள ஓர் இளைஞரால் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் அவர் எவ்வாறு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டப் போகிறார் என்று ரபிடா கேள்வி எழுப்பினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்