சபா, மார்ச் 22.
கல்லூரி ஒன்றில் நிகழ்ந்த கைகலப்பில், கல்லூரி மாணவர் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
சபா, லஹாட் டத்து- வில் உள்ள கல்லூரி ஒன்றின் தங்கும் விடுதியில் இன்று காலை 6.50 மணியளவில் 17 வயது மாணவன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரோஹன் ஷாஹ் அஹ்மத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கல்லூரியின் இயக்குநர் போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாணவனின் உடல், சவப்பரிசோதனைக்காக லஹாட் டத்து மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.