அலோர் ஸ்டார், ஜன – 7,
ஒற்றுமை அரசாங்கம் வெகு விரைவில் கவிழ்ந்து விடும் என கெடா மாநில முதல்வர் சனுசி நோர் கருத்துரைத்த நிலையில், அவ்வாறான நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கெடா பி எச் தலைவர் மாஹ்ஃபுஸ் ஓமார் பதிலடி கொடுத்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையானது மலேசிய அரசியல் நிலைத்தன்மை அற்றது எனும் எண்ணத்தை அவர்கள் மத்தியில் உண்டாக்கும் ஆபத்து இருப்பதாக மாஹ்ஃபுஸ் குறிப்பிட்டார்.
இதனால், கெடா உட்பட ஒட்டுமொத்த நாட்டின் பொஉளாதாரத்தையே பாதிக்கும் எனவும் மாஹ்ஃபுஸ் ஓமார் கூறினார்.
சனுசி பிற்போக்கு சிந்தனையுடன் நடந்து கொள்ளாமல், தமது பதவிக்கு ஏற்ற முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என மாஹ்ஃபுஸ் தெரிவித்தார்.