கோலாலம்பூர், மார்ச் 25.
நாட்டின் 217 ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரச மலேசிய போலீஸ் படையினருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
நாட்டின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் அரச மலேசிய போலீஸ் படையினர் ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியதாகும் என்று தமது முகநூலில் இன்று பதிவேற்றம் செய்துள்ள வாழ்த்துச் செய்தியில் மாமன்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நன்னாளில், போலீஸ் படையில் தங்களின் பங்களிப்பை வழங்கிய பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் போலீஸ்காரர்களுக்கும் மாமன்னர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.