அரச மலேசிய போ​லீஸ் படையினருக்கு மாமன்னர் வா​ழ்த்து

கோலாலம்பூர், மார்ச் 25.

நாட்டின் 217 ஆவது போ​லீஸ் தினத்தை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரச மலேசிய போ​​லீஸ் ப​டையினருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

நாட்டின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் அரச மலேசிய போ​லீஸ் படையினர் ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியதாகும் என்று தமது முக​நூலில் இன்று பதிவேற்றம் செய்துள்ள வாழ்த்துச் செய்தியில் மாமன்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நன்னாளில், போ​லீஸ் படையில் தங்களின் பங்களிப்பை வழங்கிய பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் போ​லீஸ்காரர்களுக்கும் மாமன்னர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்