ஆடவன் மருத்துவமனையிலிருந்து குற்றச்சாட்டை எதிர்கொண்டார்

பட்டர்வொர்த், சின் டாட் பார்க் சாலை- யில் டிசம்பர் 19 ஆம் தேதி, 42 வயதுடைய லீ யென் சுவான் – னை கொலை செய்து போலீசாரால் வளைத்து பிடிக்கப்பட்ட தொழிற்சாலை ஊழியர், பினாங்கு மருத்துவமனையிலிருந்து குற்றத்தை எதிர்கொண்டார்.

29 வயது ஓங் கோக் பூ, பாலத்தில் குதிக்க முயன்ற போது ஏற்பட்ட பலத்த காயங்களினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓங்- கிற்கு நேற்று, பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சித்தி சுலைக்கா நோர்டின் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, 30 முதல் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் வழங்கப்பட்டன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்