பாடாங் செராய், குவார் லோபாக் பள்ளிவாசலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவன் ஒருவர் உயிரிழந்தார்.
20 வயதுடைய அவ்வாடன் நேற்று அதிகாலை 5:45 மணியளவில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பள்ளிவாசல் முன் நிறுத்தப்பட்டிருந்த வேன் நகரும் வேளையில் வேக கட்டுப்பாடின்றி பள்ளிவாசல் உள்ளே நுழைந்ததாக தொழுகைக்கு வந்த சுக்ரி முகமது தெரிவித்தார்.
அந்த ஆடவன் மோட்டார் சைக்கிலிருந்து மூன்று மீட்டர் தூரத்தில் தூக்கி எறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர், இச்சம்பவத்தை குறித்து காவல்துறைக்கு தெரிவித்ததாக சுக்ரி முகமது விவரித்தார்.