கிளந்தானில் பல இடங்களில் நாளை தொடங்கி திங்கட்கிழமை வரை வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான மழையினால் வெள்ளம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ளுமாறும் மெட்மலேசியா பொதுமக்களை கேட்டுக் கொண்டது.